தமிழ் படங்கள் நமக்கு கற்றுத்தரும் பாடங்கள் நிறைய உண்டு... அதில் ஒரு பகுதி..

மணிரத்தினத்தின் 'நாயகன்' படத்தில் வரும்
"அவன நிறுத்த சொல்லு.. நா நிறுத்துறேன்" என்ற வசனத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது......

"அவனும் நிறுத்த மாட்டான்,
எவனும் நிறுத்த மாட்டான்,
நாமும் நிறுத்த வேண்டாம்."
என்பது தான்!!!!!
நினைவுகள் நம்மை கொன்றுவிடும்
ரகசியம் நம்மை தின்றுவிடும்
என்று எண்ணம் பல முறை சுழன்று வந்தாலும்
சாதி, மதம்
இனம், மொழி
வீடு, நாடு
போன்ற எல்லா மூலத்தை தாண்டி
தான் யார் என்பதை தன்
நினைவுகளின் வழியாக
ரகசியங்களின் வாயிலாக...
அறிகிறான்..!!
திமுக இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இருந்து ஒன்று தெரிகிறது..

என்றுமே ஒரு தமிழனின் மன ஓட்டம் என்பதும் ஒரு இந்தியனின் மன ஓட்டம் என்பதும் ஒத்துப்போகாது என்று..!!

தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட கட்ச தீவை மிட்பது, மத சார்பற்ற ஆட்சி அமைப்பது, மத நல்லிணக்க வரலாறு படைப்பது, சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவது, தனியார் துறையில் இட ஒதிக்கீடு என்று சொல்லபட்ட எந்த வாக்குறுதிகளும் மத்தியில...் நிறைவேறப்போவதில்லை.. இவை எல்லாவற்றிற்க்கும் எதிரான மனப்போக்கையே மத்தியில் உள்ள இரண்டு பெரிய கட்சிகளும் கொண்டுள்ளது.. ஆக இது தமிழ் ஓட்டை சேர்ப்பதற்கான ஒரு வெற்று அறிக்கையே அன்றி வேறில்லை..!!

என்ன ஒரு ஆச்சிரியம் என்றால் பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றின் விலை கொள்கையில் மாற்றம் என்ற ஒன்றை தவிர வேறு எதிலும் கருணாநிதி அண்ட் கோ தன் சொந்த வருவாய் ஈட்ட வழியில்லை.. ஒரு வேளை இது மத்திய ஆட்சிதானே தமிழ் நாட்டை முழுமையாக முடித்துவிட்டு பின் அதில் கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்துவிட்டார் போலும்..!!
தூக்கு தண்டனை ரத்து என்று சொல்வது ஒரு வேளை அண்ட் கோ மெம்பரில் யாருக்கேனும் கிடைத்துவிட்டால் என்ற பயம் என்று கிண்டலாக பொது புத்திக்கு தோன்றினாலும் அந்த அளவிற்கு சில்லியாக சிந்திக்க மாட்டார் என்பது நாடறிந்த ஒன்று..!!
அடிப்படை கோட்பாட்டிலிருந்து
விலகும் போது எப்படிப்பட்ட
சித்தந்தங்களாகவோ கொள்கைகளாகவோ
இருந்தாலும் சரி..
இறுதியில்
கதாநாயக வழிபாட்டிலோ அல்லது
கதாநாயக வசைபாட்டிலோ தான்
போய் முடியும் என்பது
எனக்கு தெரிந்த
வரலாற்றுப் பாடம்..
"தமிழ்நாட்டில் ஏப்ரல் 24 தேர்தல்".

ச்ச்ச்ச இந்த தடவையும் மிஸ் ஆகிடுச்சு. ஓட்டு போட இல்ல. தேர்தல்ல வேட்பாளரா நிக்குறது..!!

பின் குறிப்பு: மேலே சொல்லப்பட்ட கருத்து எனக்கு like வாங்கவும் நீங்க சிரிக்கவும் மட்டும். அத விட்டுட்டு எவனாவது கீழ அசிங்கமா comment அடிச்சிங்க அவ்வளோதான்.. அப்படியே உங்களால இந்த கொடுமைய தாங்க முடியலனா fb messgeலயோ அல்லது whatsappலயோ திட்டலாம். ஏன்னா அப்பறம் நீங்க எதாவது தப்ப...ா சொல்லி என் ரசிகர்கள் ரசிகைகள் தொண்டர்கள் குண்டர்கள் எதாவது உங்கள செஞ்சுட்டா அதுக்கு நான் பொறுப்பில்ல. சொல்லிப்புட்டேன். அப்படியும் முடியாது என்ன அழவச்சு பாக்கணும்னு நினைச்சீங்கனா அப்பறம் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுதுன்னு நா வேறு மாநிலம் அல்லது வேறு தேசம் போக வேண்டியது இருக்கும்...

இறுதி குறிப்பு: வர வர கருத்த விட குறிப்பு பெருசா போகுது...

இப்படிக்கு,
தேர்தல் சுவாரஸ்யங்களுடன் 'இந்திய குடிமகன்' துபையிலிருந்து.. நன்றி..!!
ஊடகங்கள் எதை கற்று கொடுத்துருக்கிறதோ இல்லையோ, எதையுமே கேட்டவுடன் நம்பிவிடக்கூடாது என்பதை அனுபவ பூர்வமாக எனக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது..!!

நன்றி சமுதாயத்தின் அத்துனை தூண்களுக்கும்..!!
நாளைக்கு +2 பரிட்சை ஆரம்பிக்குது.. இந்த நேரம் பாத்து வெளியான #தெகிடி படத்துல "எக்காரணத்த முன்னிட்டு நீங்க சப்ஜக்ட நெருக்கவே கூடாது"னு சொல்றானுங்க..!!??

ஓட்டு..!!!

என்றோ எழுதி வைக்கப்பட்ட தீர்ப்பை தேர்தலின் சில மாதங்களின் முன்பு வெளிவிடுவதில் தெரிகிறது ஒவ்வொரு ஓட்டின் மதிப்பு..!!
இந்த ஓட்டுரிமை இருக்கும் மட்டும் தான் ஒரு சமுகத்தின் குரல் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட/ தேர்ந்தெடுக்கப்படுகிற ஆளும் அரசுக்கு எட்டும்..!!

இனி ஒவ்வொரு தனி மனிதனின் குரல் கூட எட்ட வேண்டுமாயின் அது ஒன்றால் மட்டுமே முடியும்.. அது ஒரு தனி மனிதனின் ஓட்டு..!!

நீயா நானாவில் வந்த ஒரு அரசியல் பிரமுகர் சொன்னார்: அரசியல் சாக்கடை அல்ல. வாக்காளர் அட்டை இருக்கும் ஒவ்வருவரும் அரசியல்வாதிதான். தெளிவான மக்கள் அரசியல்வாதி ஆகிறான். தெளிவில்லாத அரசியல்வாதி மக்களாாக ஆகிறான் என்று..!!

அலுவலக அரட்டையில் ஆப்பு...!!!






"நெத்து விஜய் டிவில ஒரு படம் போட்டான். என்ன படம்னு தெரியல. ஒரே ஒரு சீன் தான் பார்த்தேன்.. அதுக்குள்ள படம் முடிஞ்சுடுத்து." என்று சொன்ன ஒருவரிடம்..

"விஜய் டிவிலயா..?? என்ன சீன்னு சொல்லுங்க. நான் என்ன படம்னு சொல்றேன்"னு சொன்னேன்..

உடனே அவங்க "Wheel chairல இருந்த ஒருத்தர KILL பண்ணிட்டு ஒரு சின்ன பொன்ன இன்னோருத்தர் கிட்ட குடுத்துட்டு அந்த ஆளு தன்ன தானே KILL பண்ணிண்டார். அப்றம் போலீஸ்" என்று சொல்லும் போதே..

"ஓ அதுவா.. அந்த படம் பேரு ஓனாயும் ஆட்டுகுட்டியும்"னு சொன்னேன்..

"எப்படி ஆசிஃப் சொல்லியே  முடிக்கல அதுக்குள்ள சொல்லிடீங்க.. இந்த Knowledgeஅ நீங்க கொஞ்சம் படிப்புல காமிச்சேள்னா இந்நேரம் CWA Final முடிச்சுருக்கலாம்ல" அப்படினு சொன்னாங்க..

"ஏங்க விஜய் டிவில போட்ட ஒரு  படத்த ஒரு மாசத்துல இருக்குற வாரத்துல வாரம் போட்டு கொல்லுவான். இது நம்ம ஊர்ல யார கேட்டாலும் சொல்லுவாய்ங்க. அதுக்காக இப்படி ஒடனே CWA முடிச்சுருக்கலாம்னு சொல்லுறது கொஞ்சம் ஓவருங்க"னு  சொன்னேன்.

இப்ப என்ன ஒரே ஒரு குழப்பம்னா இந்த ஆப்பு எனக்கா இல்ல விஜய் டி.விகானு தான்..

நீயா? நானா? ஒன்னு போடனும் போல...!!




அர்விந்த் கெஜ்ரிவாலின் ராஜினாமா ஒரு அரசியல் நாடகம், ஜனநாயகத்திற்கு கட்டமைப்பிற்கு (Constitution) எதிரானது - பா.ஜ.க, காங்கிரஸ் குற்றசாட்டு.

பாபர் மஸ்ஜித் இடித்த போது பார்த்துக் கொண்டிருந்த காங்கிரஸ் கபோதிகளுக்கும், அதை இடித்து விட்டு இனி பாபர் மஸ்ஜித் கட்ட சொல்லி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும் அதை ஏற்றுகொள்ள மாட்டோம் என்று சொன்ன பா.ஜ.க கயவர்களுக்கும் ஜனநாயக கட்டமைப்பை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை..
அர்விந்த் கெஜ்ரிவால் ராஜினாமா..!!!

சில ஆதாயங்களுக்காக கொள்கையை விற்று எதை பார்த்தாலும் குறை மட்டுமே சொல்லிக்கொண்டு இருக்கும் பலர் மத்தியில், தான் எடுத்த கொள்கையை நிறைவேற்ற முடியாத சூழலில், பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் இரண்டும் ஒத்துழைக்காத நிலையில், முதல்வர் பதவியை விட்டு ராஜினாமா செய்யும் அளவிற்கு துணிச்சல் கொண்ட அர்விந்த் கெஜ்ரிவால் உண்மையில் ஆச்சிரியத்திற்குரியவர்...!!!

இப்போது ஆச்சிரியபட்டுவோம். நாளை முதல் ஊடங்கங்கள் எழுப்பும் சந்தேகங்களை(??) அலச ஆரம்பிக்கலாம்...
An open discrimination can be broken by Struggle & Strive ;

A Hidden discrimination can be broken by a Serious Silence..!!

WHITE HOUSE DOWN


கடந்த ஆண்டு வெளியான WHITE HOUSE DOWN என்ற ஆங்கில திரைப்படத்தை நேற்று தான் பார்த்தேன். பகையுணர்வு கொண்டுள்ள சில அமெரிக்க வீரர்களும், பழிவாங்கும் எண்ணத்துடன் ஒரு அமெரிக்க பாதுகாப்பு படை தலைவனும், பதவி ஆசையும் பணத்தாசையும் கொண்ட ஒரு உயர் அதிகாரியும் சேர்ந்து எப்படி அமெரிக்க அதிபருக்கும் கொன்று, வெள்ளை மாளிகையை தகர்த்து, உலகின் பல்வேறு நாடுகளுக்கு இடையே போர் மூள வைக்க Inside Job என்ற கோட்பாடை தொட்டு சிறப்பான ஒரு அதிரடி திரைப்படமாக எடுக்கப்பட்ட இருந்தது. ஒரு குறிப்பிட்ட காட்சியில் இன்றைய ஊடகங்கள் செய்வது போல இது “அரபிய தீவிரவாத அமைப்பின் சதி” என்று செய்தி காட்டப்படுகிறது. இதை பார்த்த இந்த பாதுகாப்பு படை தலைவனும், சதிகளின் மூல தலைவனும் ஆனா ஒருவன் எப்போதும் போல நம்ம ஊடகம் இது அரபிய தீவிரவாத அமைப்பின் சதி என்று நம் ஊடங்கங்கள் சொல்ல ஆரம்பித்து விட்டது என்று பெருமிதம் சிரிப்பை வெளிப்படுத்துகிறான்.


சரி இப்ப என்னன்னா இந்த காட்சிய எப்படி தமிழ்-ல மொழிபெயர்த்து இருக்கிறான் இன்னைக்கு பார்த்தேன். பார்ப்பதற்கு முன்னாலே தெரியும் இவனுங்க என்ன பண்ணிருப்பனுங்கன்னு. நினைத்த மாதிரியே அரபு நாடு என்ற வார்த்தைய ரொம்ப தெளிவா எடுத்து வைத்துவிட்டு “இஸ்லாமிய தீவிரவாத கூட்டம்”னு மொழிப்பெயர்த்து இருக்குரானுங்க. அவனுங்களே இல்லன்னு சொன்ன கூட இங்க இவனுங்க விட மாட்டானுங்க போல. என்ன பண்றது.. கழிசடைகளும் அடிவருடிகளும் இருக்குறப்போ இது தான் வரும் என்பது பார்க்காமலே தெரியவருவதில் எந்த வித ஆச்சிரியங்களும் இல்லை...
தமிழுக்கும் தமிழனுக்கும் இன்றைய சூழழில் நடக்கும் பல்வேறு நாசவேலைகளில் தமிழ் புத்தாண்டு தை 1-ஆ அல்லது சித்திரை 1-ஆ என்ற குழப்பத்தில் தமிழனையே தள்ளியதை அந்நாசவேலைகளின் ஆரம்பப் புள்ளியாகப் பார்க்கின்றேன்.

"ஹாப்பி டமில் நியு இயர்" என தமிழர்களே சொல்லும் நிலையை காணும் பொழுது இதற்கு காரணமாக இரண்டு பேர் தான் இருக்க முடியும்..!!

ஒன்று தமிழனுக்கான நாசவேலைகளில் தொடர்ந்து ஈடுபடும் ஒரு கூட்டமும்..!!
மற்றொன்று தமிழுக்கான நாசவேலைகளில் தொடர்ந்து ஈடுபடும் தமிழனும்..!!
ரசிக்கிற மாதிரி நிறைய வசனம் "வீரம்" படத்துல இருந்தாலும் நான் ரசிச்ச ஒரு வசனம்...

தம்பிகள்: தன்மான சிங்கம்..!! அண்ணன் விநாயகம் வாழ்க..!! அண்ணன் விநாயகம் வாழ்க..!!

அண்ணன் விநாயகம் (அஜித்) : முதல்ல இத நிறுத்துங்கடா... நாடு உருப்புடும்...
மாவீரன் அலக்ஸாண்டர் சொன்னாராம்: "நான் எடுத்த முயற்சி சரியா தவறா என்று தெரியாது. அது தவறாக இருந்தாலும் சரியாக மாற்ற முயற்சிப்பேன்"

இன்று காலை mobile bankingஅ ரொம்ப நாள் கழித்து திறந்தேன். கடவுச்சொல் (password) தவறுனு வந்துச்சு. ஒரு வேளை தப்பா தான் அடிச்சுட்டமோனு மீண்டும் மீண்டும் முயற்சித்தேன். "You have exceeded maximum tries and your account is blocked. Contact your nearest branches" சொல்லிப்புட்டான் பய புள்ள..
காலங்காத்தாலயே ஒருத்தன் செம்ம கடுப்ப கெளப்பிட்டான்..

'ஜில்லா' படத்தோட கதைய நெட்ல போட்டுருக்கான் படிச்சியான்னு கேட்டா அதுக்கு என்ன சொல்லனும் அவன். ஒன்னு படிச்சேன்னு சொல்லனும்; இல்ல படிக்கலன்னு சொல்லனும்..

அவன் சொல்றான் அண்ணாவோட படத்தெல்லாம் கதை கேக்காம தான் போகனும்.. அப்போ தான் கதை surprise-அ இருக்கும்ங்குறான்.

விடுவனா நான்: எது கதைல surprise-u suspense-a. டேய்.. அப்படி நா என்னனு உன் அண்ணனுக்கு தெரியுமாடா... பேசுவடா பேசுவ .. 11/12th படிக்கும் போது புதிய கீதை, பகவதி, வசீகரா-னு back to back ஹிட் கொடுத்த தளபதிக்கு உதயா flop ஆகிடுச்சுனு சொன்ன பய தான நீ.. பழகுனதுக்கு இதெல்லாம் கேக்கனும்னு இருக்கு..

நண்பனும் எதிரியும் அவர்களா உருவாகுரதில்ல.. நாம்மளா உருவாக்குரதுதான்.. மனசுல வச்சுக்கோ...